முதலில் வெட்பாலை என்பது செதில்களில் மட்டுமே செயல் புரிய கூடியது.இது ஆரம்ப கால சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு குணம் ஆகாது.ஏன் என்றால் ஆரம்ப கால சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு செதில்கள் இருக்காது.தழும்பு மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக கூடும்.இங்கே ஒரு விசயத்தை நான் கூற வேண்டும்.என்னவென்றால் சிலர் ஆரம்ப கால சோரியாசிஸ் எடுத்து கொண்டு சந்தையில் விற்கும் சில எண்ணெய்கள் அல்லது கிரீம்கள் அவர்களாகவே சிகிச்சைக்காக எடுத்து கொள்கின்றனர்.இது குணம் ஆகும் தான் இப்போது என்றால் நீங்கள் இதனை உபயோகித்து கொண்டு இருக்கும் வரை தான்.எடுத்து காட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் சிறு குழந்தையை தட்டி கொடுப்பது போல் தான் இந்த மருந்துகளின் தன்மை இருக்கும்.அது போக சோரியாசிஸ் என்பது வெளியில் உள்ள தோலில் மட்டுமே படர கூடிய ஒன்று அல்ல.இந்த அடுத்த அடுத்த சோரியாசிஸ் நிலைகளில் ரத்தத்தில் கலந்தே இருக்கும்.அதனால் இந்த கிரீம்கள் உபயோகமற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சோரியாசிஸ் இருப்பவர்களின் வயது பற்றியும் பார்க்க வேண்டும்.ஏன் என்றால் அவர்களுடைய மெட்டபாலிசம்(நம் உடலில் நடக்கும் சில ரசயான மாற்றங்கள்) மற்றும் வெள்ளை அணுக்களின் செயல் புரிதல்களையும் பார்க்க வேண்டும் ஏன் என்றால் இதனுடைய வேகத்தினை பொறுத்தே மருந்தின் வேகமும் செயல்படும்.அது போக ஒவ்வாமை என்ற ஒரு விசயமும் உண்டு.அனைவரின் உடல் நிலைகளும் ஒன்றாக இருக்காது அல்லவா?அதனால் மருந்தின் செயல் புரிதல்களிலும் வேகம் மற்றும் தாமதம் ஏற்படும்.
அதன் பின் இப்போது மிக முக்கியமான விசயத்திற்கு வருவோம்.இதுவரை நான் பலரிடம் பேசி மற்றும் நிஜ வாழ்கையில் தெரிந்து கொண்ட விசயத்தினை பற்றி கூறிவந்தேன்.நானாகவே மருந்துகளையும் எனக்கு தெரிந்த சில அறிவுரைகளையும் கூறி வந்தேன்.என்னுடைய லட்சியமே எந்த ஒரு மருத்துவரையும் அணுகாமல் பதிவின் மூலமாகவே கருத்துக்களை கூறுவது தான்.ஆனால் இதில் உண்மையான விசயம் என்ன வென்றால் சோரியாசிஸ் உட்மருந்தும் தேவைப்படுகின்றது.அது போக அனைவர்க்கும் ஒரே மாதிரியான சோரியாசிஸ் நிலைகள் இருப்பதில்லை.அதே போல் சிலருக்கு சோரியாசிஸ் அறிகுறிகள் கண்டு கொள்ள முடிவதில்லை.

இருப்பினும் சோரியாசிஸ் உட்கொள்வதற்கான மருந்துகளின் செயல்முறைகளை கூற என்னுடைய சித்தா மறுத்து விட்டார்.அவர் கூற மறுத்ததன் காரணங்கள் எனக்கும் சரியாக படவே முதல் முறையாக அவரினை பரிந்துரை செய்ய முன் வந்துள்ளேன்.அவர் கூறிய காரணங்கள்.
*முதலில் அவருடைய மருத்துவ பார்முலாவினை தெரிவித்தால் அதே பார்முலாவினை உபயோகபடுத்தி சந்தையில் அதே மாதிரியான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு விடும்.
*அடுத்ததாக என்னால் அவருடைய மருத்துவ தொழில் பாதிப்பு அடைய வாய்ப்பு உண்டு.
*இந்த பதிவினை சோரியாசிஸ் உள்ளவர்கள் மட்டுமே படிப்பது இல்லை.சித்தா மருத்துவர்களோ அல்லது இதனை பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்தவர்கள் இதே போன்று மருந்துகளை தயாரிப்பதில் ஈடுபடலாம் அல்லவா?
சரி இப்போது அவருடைய விவரம் :

பெயர் : சுந்தர் (அவருடைய தளம் இங்கே)
தொழில் : மருத்துவர் - சோரியாசிஸ் குணப்படுத்துதல்(இதுவரை இறுதிகட்ட நிலையில் உள்ளவர்களை கூட திறமையாக குணப்படுத்தி உள்ளார்.இவருடைய சிகிச்சையில் சோரியாசிஸ் மீண்டும் வந்தது இல்லை.அது போக குறிப்பிட வேண்டிய ஒரு விசயம் என்ன வென்றால் மிக குறைந்த அளவில் மட்டும் லாபம் வைத்து இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்).
தொலைபேசி எண் :9994063531 ( இந்த பதிவின் மூலமாக வருபவர்களுக்கு நான் பொறுப்பு என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளேன்.என்னை எவ்வாறு நீங்கள் நம்புகின்றீர்களோ அதே போல் இவரையும் நீங்கள் நம்பலாம்.
நன்றி: cuddalore-news.blogspot.com

என்னுடைய தளத்தினை கடலூர் மாவட்ட செய்தி தளத்தில் பரிந்துரை செய்து உள்ளனர்.நன்றி கடலூர் செய்திகள்.நான் மீண்டும் பதிவினை எழுதுவதற்கு வாசகர்கள் ஆகிய நீங்களும் கடலூர் செய்திகளும் தான்.அவருடைய பதிவில்,
// வலைப்பூ முகவரி : http://jayonline.blogspot.com/
தோழி மதுரை பொண்ணு அவர்களின் சோரியாஸ் நோய் பற்றிய தகவல் கொண்ட சமூக வலைத்தளம். சோரியாஸ் நோய் பற்றிய கீழ்காணும் அனைத்து தகவல்களையும் தலைப்பு வாரியாக இந்த வலைதளத்தின் ஊடாக அறிந்துகொள்ளலாம்.
ஆரோக்கிய வழிகள்
உண்மையான காரணங்கள்
உண்மையான மருந்து
உருவாகும் சூழ்நிலை
ஏமாத்து வேலைகள்
சோரியாசிஸ் ஆண்களுக்கு
சோரியாசிஸ் குணமாக
மருத்துவ குழப்பங்கள்
முதல் பதிவு
லிக்குவிட் பாரபின்
நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
இது போன்ற சமூக வலைதளங்களை வரவேற்போம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். //
என்னுடைய பதிவு இங்கே
இந்த பதிவு நம்முடைய அனைத்து சோரியாசிஸ் நண்பர்களுக்கும் சென்று அடைய மறக்காமல் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் வோட்டு போட்டு விட்டு இதை பற்றி உங்களுடைய நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.உங்களுடைய சந்தேகங்களை தயக்கம் இன்றி மறுமொழியில் கேட்கலாம்.








